வியாழன், 9 ஆகஸ்ட், 2018

​மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள house lifting முறை! August 6, 2018

Image

ஈரோடு மாவட்டத்தில் முதன் முறையாக, HOUSE LIFTING முறையில், வீட்டை 5 அடி உயரம் உயர்த்தும் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது. 

ஈரோடு கோட்டை தில்லைநகர் பகுதியில் பகுதியில், மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கிடுவதால், தட்சிணாமூர்த்தி என்பவர்,  2 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள, தனது மூன்றடுக்கு கட்டிடத்தை, நவீன முறையில் 5 அடி உயர்த்திட முடிவு செய்தார். 

இதனையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஜாக்கிகளைப் பொருத்தி, 26 பணியாளர்களுடன்  கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பணி, அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது. இத்தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில், தனது வீட்டை சீரமைத்துள்ளதாக, வீட்டின் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Posts: