Home »
» தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும்: சென்னை வானிலை மையம் November 1, 2018
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக கூறினார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் எனகூறிய அவர், இதர பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தொடங்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்
Related Posts:
புளி புத்தம் புதிதாக இருக்க…
சில பெண்கள் புளியை மொத்தமாக வாங்கி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த புளியை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. புளியை பான… Read More
எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?
ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல… Read More
சோளப் பாயசம்
ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி ச… Read More
அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!
‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். … Read More
கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?
”ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்… கழிவுகள் மட்க ஆரம்பித்… Read More