செவ்வாய், 30 ஜூன், 2020

ஊரடங்கை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை! - மருத்துவக் குழு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமானதையடுத்து, கடந்த 19ம் தேதியிலிருந்து வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.