செவ்வாய், 30 ஜூன், 2020

மாட்டு வண்டிகளில் வந்து காங்கிரஸார் போராட்டம்

Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan : பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் மோசம் அடைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டு வண்டி, சைக்கிள், குதிரை வண்டிகளில் வந்து, சாஸ்திரி பவன் முன் நின்று காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள், மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிரத்யேக காட்சிகள்.  Express Photos by Prem Nath pandey.

Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan

சாஸ்திரி பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மக்கள் பலர் வேலையின்றி வாடி வருகின்றனர்.  இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan

மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர்

கடந்த 7ம் தேதி முதல் 21 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த 21 நாட்களில் பெட்ரோலின் விலை ரூ. 9.12 வரை உயர்ந்துள்ளது. அதே போன்று டீசலின் விலையும் ரூ. 11.01 வரை உயர்ந்துள்ளது.

சண்டிகர்

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI-ன் உறுப்பினர்கள் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்காக போராடிய காட்சிகள். Express Photo by Kamleshwar Singh

Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan

சண்டிகர் செக்டார் 10-ல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் காட்சி


Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan

பெட்ரோல் பங்க் முன்பு மோடியின் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்