ஞாயிறு, 18 மார்ச், 2018

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்!” : ராகுல்காந்தி March 17, 2018

Image


காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை ஒருங்கிணைக்கும் முக்கிய காரணியாக விளங்குவது காங்கிரசின் கை சின்னமே என குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி மட்டுமே நாட்டு மக்கள் அனைவருக்குமான கட்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார். 

காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். பாஜக வெறுப்பை வெளிப்படுத்தி வரும் அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி அன்பை ஆயுதமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.