Home »
» நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்பு! March 13, 2018
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள கிஸ்டாரம் மலைப்பகுதியில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்றின் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய வாகனத்தில் சிஆர்பிஎப் படையினர் எடுத்து சென்ற ஆயுதங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து கிஸ்டாரம் வனப்பகுதியில் சிஆர்பிஎப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Posts:
குஜராத் மாநிலத்தில் தொடங்கியது சர்வதேச பட்டம் விடும் திருவிழா! January 07, 2019
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மகா சங்கராந்தி விழாவையொட்டி, 30வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இதில், தென்கொரியா, சீனா, மலேசியா உள்… Read More
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு! January 07, 2019
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ரஃபேல் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக… Read More
காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்!” - மு.க.ஸ்டாலின் January 07, 2019
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்… Read More
கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப் பள்ளிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக வைரமுத்து கவலை! January 07, 2019
கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப் பள்ளிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் வெற்றித்தமிழர… Read More
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? January 07, 2019
கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆ… Read More