செவ்வாய், 31 ஜூலை, 2018

இந்தியர்களுக்கு மறுக்கப்படும் ஹெச் ஒன் பி விசா! July 31, 2018

ஹெச் ஒன் பி விசா மற்ற நாடுகளை சேர்ந்தவர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு அதிகளவில் மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச் ஒன் பி விசா மூலம் நிறுவனங்கள், சிறப்புப் பணிகளுக்குத் திறன் வாய்ந்த அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு அந்தப் பணியிடங்களை நிரப்ப முடியும். இந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்....

முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை! July 31, 2018

ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையானது கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குறவன் மற்றும் குறத்தி என்ற 2 மலைகளை...

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை! July 31, 2018

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமியும், உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் ஒரு சிறுமியும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை...

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ராகுல்காந்தி இன்று சென்னை வருகை! July 31, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.உடல்நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின்...

முணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குழுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்! July 31, 2018

மலைவாசஸ்தலமான மூணாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்திருக்கும் மூணார், சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது. ‘தென்னகத்து காஷ்மீர்’ என அழைக்கப்படும் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ள...

வன்மங்களின் கூடாரமாகிறதா வலைதளங்கள்! July 31, 2018

சமூகவலைதளங்களில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி கடந்த சில தினங்களாக வன்மங்களை கொட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். உண்மையில் இது போன்ற வக்கிரமங்கள் எப்படிப்பட்டது? திமுக தொண்டர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றிய முழு விவரம். இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி. உடல் நலிவுற்றுள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர...

மலையில் இருந்து இறங்க வழி தெரியாமல் 2 நாட்கள் தவித்த ரஷ்ய பயணி மீட்பு! July 30, 2018

திருவண்ணாமலை மலை மீது ஏறி, கீழே இறங்க வழி தெரியாமல் 2 நாட்களாக தவித்து வந்த ரஷ்ய சுற்றுலா பயணியை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு சுற்றுளா வரும் வெளிநாட்டினர் சிலர் திருவண்ணாமலை மலை மீது ஏறி சென்று சுற்றிப் பார்க்கின்றனர். இந்நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர்...

ஆளுநரின் உத்தரவை கிழித்து எரிந்த கெஜ்ரிவால்! July 30, 2018

டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, ஆளுநர் அமைத்த குழுவின் அறிக்கையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார். டெல்லியில் அரசு மற்றும் பொதுஇடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, துணை நிலை ஆளுநர் பைஜால், குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்த குழு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

திங்கள், 30 ஜூலை, 2018

TRAI தலைவர் வங்கிக்கணக்கில் ஒரே ஒரு ரூபாயை டெபாசிட் செய்த ஹேக்கர்! July 30, 2018

TRAI தலைவர் வங்கி கணக்கில் ஒரே ஒரு ரூபாயை ஹேக்கர்கள் டெபாசிட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை எனக் கூறி வந்த, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு, மர்மநபர் ஒருவர் ட்விட்டரில் சவால் விடுத்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சர்மா, தமது ஆதார் எண்ணை பதிவிட்டார். மேலும் அவர், “தமது...

அமெரிக்கா: 15 வயதிலேயே பொறியியல் பட்டம் வென்று சாதித்த இந்திய வம்சாவளி சிறுவன்! July 29, 2018

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அமெரிக்காவில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான்.தனிஷ்க் ஆப்ரஹாம் என்ற 15 வயது சிறுவன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பயோமெடிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.இளம் வயது முதலே படிப்பில் மிகவும் சிறந்து விளங்கியவராக திகழ்ந்த தனிஷ்க், எண்ணற்ற பிரிவுகளில் இணையங்களில்...

இந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? July 30, 2018

இந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் கூறுகின்றன.கடந்த 1953 ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 64 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்த...

போலி ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை திருடிய மர்ம மனிதன் July 30, 2018

போலி வங்கி ஆப்கள் மூலம் தனியார் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடிய மர்ம மனிதன் பற்றிய செய்தி வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.மக்களின் பணம் பல்வேறு வகைகளில் கொள்ளையடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பம் மூலம் புதிது புதிதாக மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்...

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி July 30, 2018

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின்  வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை சுருக்கமாக காணலாம்..புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு, கடந்த 1886ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ம் தேதி மகளாக பிறந்தார் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம்...

சிக்குகிறாரா மெகுல் சோக்ஸி? ஆண்டிகுவா அரசிடம் உதவி கோரிய இந்தியா! July 30, 2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹14,356.84 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியை இந்தியா நாடியுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு முதல் போலியான உத்தரவாத கடிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் அளித்து அதன் மூலம் ₹14,356.84 கோடி ரூபாயை மோசடி செய்த...

ஞாயிறு, 29 ஜூலை, 2018

​துபாயில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு! July 29, 2018

துபாய் நாட்டில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. துபாய் அரசின் இஸ்லாமிய சமய அறநிலையத்துறை சார்பில் இந்த திருவிழா நடைபெற்றது. இதில், அரபி, ஜெர்மன், ஸ்பானிஷ், ருமேனியா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மொழி, மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில்...

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பின்தங்கி உள்ளதாக ஆய்வில் தகவல்! July 28, 2018

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தாலும், இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் பின்தங்கி உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் இண்டர்நெட் பயன்பாடு குறித்து 39 நாடுகளில் Pew என்ற ஆய்வு மையம் சார்பில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் உலகளவில் இரண்டிலும் தென்கொரியா முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் 22 சதவீதம் பேர்...

​உலக அளவிலான பளுதூக்குதல் போட்டியில் பங்குபெற நிதியுதவி கோரும் ஏழை மாணவி! July 28, 2018

தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக அளவிலான சப்-ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்க தனக்கு, நல்ல உள்ளங்கள் நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என, ஏழை மாணவி லோகப்பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த லோகப்பிரியா அண்மையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று...

விதைப் பண்ணை மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! July 29, 2018

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருந்த விதைப் பண்ணை, மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் மத்திய மாநில விதை பண்ணை செயல்பட்டு வந்தது. பசுமை பூத்துக் குலுங்கிய பூஞ்சோலை ஆசியாவிலேயே இரண்டாவது புகழ் பெற்ற பண்ணைவீரியம் மிக்க விதைகளை உலகின் பல்வேறு...

இறந்த மகளின் நினைவாக 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வரும் கிளார்க்! July 29, 2018

தன்னுடைய இறந்த மகளின் நினைவாக தான் பணியாற்றி வரும் பள்ளியில் உள்ள 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார் கிளார்க் ஒருவர்.கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் உள்ள மக்டம்புரா பகுதியில் உள்ளது MPHS அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவிகளின் கல்விச் செலவை அதே பள்ளியில் பணியாற்றி வரும் கிளார்க் ஒருவர் ஏற்றுள்ளார். இந்த ஆண்டு அவர்களின் பள்ளிக்...

நேரு, இந்திரா காந்தியின் பெயரால் இனிமேலும் காங்கிரஸால் ஓட்டுகளை பெற இயலாது - ப.சிதம்பரம் July 29, 2018

எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிற்கு தயாராகும் வகையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்காக பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்தும் வகையில் ‘சக்தி’ என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இத்திட்ட தொடக்க விழாவில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஒரு காலத்தில் தேர்தல் நேரத்தில் ஜவஹர்லால் நேரு அல்லது இந்திரா காந்தி பெயரை கூறினால்...

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால்! July 29, 2018

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தொலைத்தொடர்பு...

பாகிஸ்தான் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்க தலைவன் ஹஃபீஸ் சயீதின் கட்சி! July 29, 2018

பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீது-வின் ஆதரவு பெற்ற கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல இயலாமல் அந்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. வாக்களிப்புக்குப் பின்னர் நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி...

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்த 17 வயது இந்திய சிறுமி! July 29, 2018

ஆப்ரிக்கா நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில்  ஏறி சாதனை படைத்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.ஹரியானாவை சேர்ந்த 17 வயது சிறுமி சிவாங்கி பதாக். சிறுவயதில் இருந்தே வித்தியாசமான விஷயங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். எவரஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறிய பெண் அருணிமா சின்ஹாவின் வீடியோக்களை பார்த்து, மலை ஏற்றத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.பின்னர்,...

சனி, 28 ஜூலை, 2018

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரஃபேல்: பாஜகவிற்கு எதிராக ஊழல் ஆயுதம்! July 28, 2018

ரபேல் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது காங்கிரஸ் ஒரு நிறுவனம் தொடங்கி 12 நாட்களில் ரபேல் விமான ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் என அந்த கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.ரபேல் போர் விமான ஒப்பந்தம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அவர்களுக்கு எதிராக பாஜகவினர் எடுத்த ஒற்றை ஆயுதம் ஊழல் அதே ஆயுதத்தை தற்போது கையிலெடுத்துள்ளது...