Home »
» ஆபத்தை உணராமல் தண்ணீரின் நடுவே பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள்! August 3, 2018
கன்னியாகுமரி அருகே ஆபத்தை உணராமல் தண்ணீரின் நடுவே பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையால், தாமிரபரணி ஆற்றிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிற்றார் அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள், மாற்று இடங்களுக்கு செல்ல பொதுப்பணி துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழித்துறை -வெட்டுவென்னி சப்பாத்து பாலத்தை பயன்படுத்து வருகின்றனர். பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதை பொருட்படுத்தாமல் ஆபத்தான பணத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts:
*அமேசான் மழைக்காடு
*அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். *வருடமெல்லாம் கொட்டும் மழை.சூரிய வெளிச… Read More
"ஆதார் அரசியல்"
இதுதான்... "மோ(ச)டி அரசியல்"
"ஆதார் மிகப்பெரிய மோசடித்திட்டம்""மிகவும் ஆபத்தானது ஆதார்""நம்பகத்தன்மையற்றது""கோடிக்கணக்கில் பணவிரையம்""சிபிஐ விசாரணை… Read More
இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையின்படி இவ்வாறு செய்வது குற்றமாகும்.
.
கேரளத்தின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சகோதரர் E அஹமது அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த போது, அரசு சார்ந்த ஏதோ … Read More
நெஞ்சு எரிச்சளை
தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் ச… Read More
Hadis :
#நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
#உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு #மன… Read More