Credit Ns7.tv
ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர், பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் சதீஷ் என்பவர், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து பெட்ரோல் தயாரித்துவருகிறார். Plastic pyrolysis என்ற முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பெட்ரோல் தயாரித்துவரும் இவர், பல தொழிற்சாலைகளுக்கு அதனை 40லிருந்து 50 ரூபாய்க்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்.

மேலும், இதனை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேராசிரியர் சதீஷிடம் கேட்டபோது, சுற்றுசூழலை பாதுகாக்கவே இதுபோன்ற புதிய முயற்சியை செய்துள்ளதாகவும் லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், 400 கிலோ பிளாஸ்டிக் மூலம் 400 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கமுடியும் எனவும் Plastic pyrolysis என்ற முறை மூலம் பிளாஸ்டிக்கை, பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஷ்-ன் இந்த புதிய முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது.