Home »
» ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் June 30, 2019
ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈடுபடுவது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என விமர்சித்துள்ளார்.
பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என குறிப்பிட்டுள்ள அவர், அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என தெரிவித்துள்ளார். இதேபோல், நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டுகளை தேர்வு செய்யும் உரிமையையும் மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
credit ns7,tv
Related Posts:
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை திட்டமிட்டப்படி அமலுக்கு வருகிறது! June 19, 2017
சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரி… Read More
பட்டாசு மற்றும் அச்சக உரிமையாளர்கள் கவலை June 21, 2017
ஜிஎஸ்டி மசோதாவால் சிவகாசியில் பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பட்டாசு மற்றும் அச்சக உரிமையாளர்கள் கவலை தெரிவித்து… Read More
தமிழ் செய்தித்தாள்கள் மக்களிடத்தில் எதை விதைக்க விரும்புகின்றன???
லண்டன் நகரில் மேலும் ஒரு தாக்குதல். பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் பலி, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்; தீவிரவாதிகள் தாக்குதலா என போலீஸ் … Read More
ஆம்புலன்ஸ் மறுப்பு: சிசுவின் உடலை கையில் சுமந்து சென்ற பெற்றோர் June 21, 2017
ஒடிஷாவில், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிசுவை, சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால், தந்தையே சிசுவின் உடலை கையில் சுமந்து சென்… Read More
ஏசி சரியாக வேலை செய்யாததால் பணியாளர்களை தாக்கிய எஸ்ஐ! June 21, 2017
ஆக்ராவில் காவலர் ஒருவர் தங்கும் விடுதியில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம், காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உத்தரப்பிர… Read More