ஞாயிறு, 30 ஜூன், 2019

ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் June 30, 2019

Image
ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈடுபடுவது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என விமர்சித்துள்ளார். 
பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என குறிப்பிட்டுள்ள அவர், அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என தெரிவித்துள்ளார். இதேபோல், நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டுகளை தேர்வு செய்யும் உரிமையையும் மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

credit  ns7,tv