வெள்ளி, 28 ஜூன், 2019

தமிழகம் முழுவதும் 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 61 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்! June 28, 2019

Image
தமிழகம் முழுவதும் 8 மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் உட்பட 61 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது  தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிற்கு பதிலாக அருண் பாலகோபாலன் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பாண்டியராஜன் கரூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
கடலூர், திருவள்ளூர், நீலகிரி, நாகப்பட்டினம், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திற்கு ஸ்ரீஅபினவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அரவிந்தனும், நீலகிரி மாவட்டத்திற்கு கலைச் செல்வனும் புதிய எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ராஜசேகரனும், சிவகங்கை மாவட்டத்திற்கு ரோஹித் நாதன் ராஜகோபாலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கண்ணனும் புதிய எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் எஸ்பிக்களாக இருந்த 12 பேர் எஸ்பிக்களாக பதிவு உயர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

credit ns7.tv