சனி, 29 ஜூன், 2019

தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! June 29, 2019

Image
சென்னையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தவறிய தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை துறைமுக பகுதியில் நடைபெற்றது. 
திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.பி. தயாநிதி மாறன், திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். 
பிராட்வே சாலையில் தொடங்கிய இப்பேரணியில்,  தண்ணீர் பிரச்னையை தீர்க்க தவறிய அதிமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். இந்த பேரணியில், ஏராளமான பெண்கள் காலி குடங்களை ஏந்தி, ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.  
அப்போது பேசிய கனிமொழி, உலகம் முழுவதும் தமிழகத்தின் அவல நிலையை உற்று நோக்கும் நிலையில் தமிழக அரசு நாடகமாடி வருவதாக குற்றம்சாட்டினார். 
கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தாலும் பிரதமர் மோடிக்கு பயந்து தண்ணீர் பெற மறுத்துவிட்டதாக கனிமொழி விமர்சித்தார்.
credit ns7.tv