வெள்ளி, 28 ஜூன், 2019

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்...! June 28, 2019

Image
பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கத்தின் மகன் உள்ளிட்டோர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில்,  பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பத்தியாளர்களின் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்றவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

credit ns7.tv