வியாழன், 20 ஜூன், 2019

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..! June 20, 2019

Image
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.   

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை மூவாயிரத்து 147 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 22 காரட் ஆபரணத்தங்கம், கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் மூவாயிரத்து 211 ரூபாய்க்கும், சவரன் 512 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 688 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
கடந்த பிப்ரவரி மாதம் கிராம் மூவாயிரத்து 230 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு, சர்வதேச அரசியல் சூழல்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகிய காரணங்களில் தங்கத்தின் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.