சனி, 29 ஜூன், 2019

மகாராஷ்டிராவில் கனமழை எதிரொலி - அடுக்குமாடி கட்டடம் இடிந்து கோர விபத்து...! June 29, 2019

Image
மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழையால் அடுக்குமாடி கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 
மகாராஷ்டிர மாநிலம் புனே, தானே உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 
விபத்து
இந்நிலையில், புனே அடுத்துள்ள கோந்த்வா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளாதில், 15 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டடத்தின் மற்றொரு பகுதியில் ஏராளமான குடிசைகளில் மக்கள் வசித்து வந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 4 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். 
News7 Tamil
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv