சனி, 29 ஜூன், 2019

காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம்! June 29, 2019

credit ns7.tv
Image
மதுரையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்வலைகளை உள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்காக மணிகண்டனை, கரிமேடு காவல்துறையினர் நேற்று மாலை காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 
இந்நிலையில் மணிகண்டனுக்கு, நேற்று நள்ளிரவு திடீரென உடல்நிலை சரியில்லாததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவரது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டனின் உறவினர்கள், விசாரணைக்காக அழைத்து சென்ற நபரை, காவல்துறையினர் அடித்து கொன்றதாக குற்றம்சாட்டி, காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.