ஞாயிறு, 30 ஜூன், 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு ரத்தத்தால் கோரிக்கை மனு அளித்துள்ள விவசாயிகள்! June 30, 2019

Image
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு ரத்தத்தால் கைரேகை வைத்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 
தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் பாதிப்படையும் என அரியலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
இதனை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சருக்கு ரத்தத்தால் கைரேகை வைத்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். மக்கள் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டேன் என ஏற்கனவே உறுதியளித்துள்ள முதலமைச்சர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
credit ns7tv