செவ்வாய், 25 ஜூன், 2019

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் தொடர்பான திருத்தங்களை வலியுறுத்திய காங்கிரஸ் எம்.பி! June 25, 2019


Image
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றதை தொடந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில், தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் தொடர்பான திருத்தங்களை வலியுறுத்தியுள்ளார் அதன்படி மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், இதன் மூலமாக சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணி புரியும் லட்சக்கணக்கான தமிழர்கள் பலனடைவார்கள் என்றும், நீட், தீப்பெட்டி தொழிலாளர்கள் நலன், அரசு மருத்துவகல்லூரி உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் விடுத்துள்ளார்.
credit ns7.tv