திங்கள், 17 ஜூன், 2019

மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை! June 17, 2019

Image
தமிழகத்தில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவேண்டியும்,  நாகை அடுத்த நாகூர் கடற்கரையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக, தமிழகத்தில்  ஏரி, குளங்கள் வறண்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்ததால்  சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், மழை வேண்டி நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், பெண்கள் உட்பட  300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.