திங்கள், 17 ஜூன், 2019

வைகோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்! June 17, 2019

Image
வைகோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்.
சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சி விசாரணை தொடங்கவிருந்த நிலையில், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது..
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக  இன்று வைகோ அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்