புதன், 19 ஜூன், 2019

ஆதாரத்தையே மாற்றும் ஆதார்..! June 19, 2019

Image
ஆதார் அனைத்து திட்டங்களுக்கும் அவசியம் என்று இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.
ஆதார் அட்டையில் இதுவரை புகைப்படம், முகவரி, பெயர் மாற்றம், போன்ற தவறுகள் வந்தாலும் தற்சமயம் வினோதமான சர்ச்சை எழுந்துள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(45) கூலி தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு இவர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து சில மாதங்கள் கழித்து பெற்றார்.
தற்சமயம் வீடு கட்டிக் கொண்டிருக்கும் அவர் வங்கி கடன் பெற அருகில் இருக்கும் வங்கி கிளையை நாடிய போது ஆதார் அட்டையை சரிபார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் . ஆதார்படி அந்த விவசாயிக்கு தற்சமயம் 120வயது என்றிருந்தது.அதாவது அவர் பிறந்த தேதி 06.11.1900 என்று கூறிப்பிட்டு இருந்தது.இதனால் லோன் வழங்க மறுத்து விட்டது வங்கி நிர்வாகம்.
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றார் மகாலிங்கம்.