செவ்வாய், 6 மார்ச், 2018

​விளாதிமிர் லெனின் சிலை தகர்க்கப்பட்டையடுத்து திரிபுராவில் 144 தடை உத்தரவு..! March 6, 2018

Image

திரிபுராவில் பாஜகவினர் நடத்திய வன்முறையில் கம்யூனிசத் தலைவர் விளாதிமிர் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, பாஜகவினர் அகர்தலா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்கியும், தீயிட்டுக் கொளுத்தியும் பாஜகவினர் வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அகர்தலாவில் இருந்த கம்யூனிசத் தலைவர் விளாதிமிர் லெனினின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜகவினர் தகர்த்தனர். 

வன்முறை சம்பவங்களால் திரிபுராவில் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே அம்மாநில ஆளுநர் ததகத ராயிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்கு நிலவி வரும் சூழல் குறித்து பேசியுள்ளார். அதே போன்று மாநில் காவல்துறை டிஜிபியிடமும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.