நீரவ் மோடி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.
நீரவ் மோடி விவகாரம் குறித்து விவாதிக்குமாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீரவ் மோடி வங்கி ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு வாய் திறந்து பேச வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். இதனிடையே, மதியம் 2 மணிக்கு, மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால், பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீரவ் மோடி விவகாரம் குறித்து விவாதிக்குமாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீரவ் மோடி வங்கி ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு வாய் திறந்து பேச வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். இதனிடையே, மதியம் 2 மணிக்கு, மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால், பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
