புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, சிலைகள் உடைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திரா சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது.
மாநிலங்களவை இன்று துவங்கியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டின் பல்வேறு இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,க்களும், சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேச கட்சி எம்.பி.,க்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி பிரச்னையை மற்ற கட்சி எம்.பி.,க்களும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையில் எதிரொலித்தது. தெலுங்குதேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் துவங்கியபோது, எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் அமளி தொடர்வதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மாநிலங்களவை இன்று துவங்கியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டின் பல்வேறு இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,க்களும், சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேச கட்சி எம்.பி.,க்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி பிரச்னையை மற்ற கட்சி எம்.பி.,க்களும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையில் எதிரொலித்தது. தெலுங்குதேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் துவங்கியபோது, எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் அமளி தொடர்வதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.