Home »
» வதந்தியான குறுந்தகவல்கள் மூலம் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க நடவடிக்கை, Forwarded Messege எது என்பதை காட்டும் புதிய அம்சம் வாட்ஸ் ஆப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தவறான குறுந்தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைக்கடத்தல் வதந்திகளால் சிலர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்களும் நேரிட்டன. அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட வாட்ஸ் ஆப்பினால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து, மத்திய அரசு அதிருப்தி வெளியிட்ட நிலையில், இதபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், செயலியில் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் சேர்த்துள்ளது. இனி, ஃபார்வேர்டு செய்யப்படும் செய்திகளை வாட்ஸ் ஆப் செயலி காட்டிக் கொடுத்துவிடும். இதன் மூலம் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா ? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், தகவல்களை பரப்பும் இணைய முகவரிகள் போலியானதா? என்பதை வாட்ஸ்ஆப் தானாக கண்டறிந்து விடும். இந்த புதிய அம்சம் மூலம் செயலியில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கி வரும் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக கருத்து கூறியுள்ள இந்தியாவுக்கான ஈரான் துணைத்தூதர், சபஹார் துறைமுக விரிவாக்கம் மற்றும் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறிய இந்தியாவின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இதுக்குறித்து இந்தியா விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம் விரிவாக்கம் மற்றும் இணைப்பு திட்டத்திற்கான முதலீடு செய்வதாக கூறிய இந்தியாவின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக இந்தியா விரிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.எரிசக்தி பொருள் விநியோகத்தில், இந்தியாவுக்கு ஈரான் நம்பகமான நாடாக உள்ளது. விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோலிய பொருட்களை கட்டுபடியான விலையில் விநியோகம் செய்து வருகிறோம். ஈரானுக்கு மாற்றாக சவுதி, ரஷ்யா, ஈராக் மற்றும் அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தால், இந்தியாவுக்கு செலவு அதிகரிக்கும். இந்தியாவிற்கு வழங்கும் சலுகைகளை ஈரான் ரத்து செய்யும். இவ்வாறு அவர் கூறினார்
Related Posts:
4 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் 29 09 2024 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் செந்தில் பாலாஜி1994 ஆம் ஆண்டு… Read More
அறிவிப்பு - முக்கணமலைப்பட்டி நலம் பண்பலை 99.6 , அறிவிப்பு - முக்கணமலைப்பட்டி நலம் பண்பலை 99.6 , அஸ்ஸலாமு அலைக்கும், முக்கணமலைப்பட்டி, நலம் பண்பலை 99.6 , சமூக வானொலி நிலை… Read More
அறிவிப்பு -முக்கணமலைப்பட்டி, பிளாக்கர் அஸ்ஸலாமு அலைக்கும், முக்கணமலைப்பட்டி, பிளாக்கர் வாசகர்களுக்கு, எமது சேவை 03/10/2024 முதல் 13/10/2024 வரை , நிறுத்தப்படவுள்ளது .....உங்கள் ஆதரவுக… Read More
தமிழக அமைச்சரவை முழுப் பட்டியல் 29 09 2024 தி.மு.க-வின் இளைஞரணி செயலாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) துணை முதல்வராகப் பதவ… Read More
பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை; 1 மாதத்துக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் 30 /09/2024 பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னையின் 2-வது விமான நிலையமாக, காஞ்ச… Read More