ஞாயிறு, 30 ஜூன், 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு ரத்தத்தால் கோரிக்கை மனு அளித்துள்ள விவசாயிகள்! June 30, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு ரத்தத்தால் கைரேகை வைத்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் பாதிப்படையும் என அரியலூர் மாவட்ட...

ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் June 30, 2019

ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈடுபடுவது,...

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவோருக்கான உணவு பட்ஜெட்டில் இனி பாகுபாடில்லை! June 30, 2019

credit ns7.tv விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவோருக்கான உணவு பட்ஜெட்டில் இனி பாகுபாடு காட்டப்படாது என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு அறிவித்துள்ளார். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான Sports Authority of India-வில் (SAI) பயிற்சி பெறும் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர், வீராங்கனைகளுக்கான உணவு பட்ஜெட் தற்போது முறையே ரூ.250, ரூ.480 மற்றும் ரூ.690 ஆக...

சனி, 29 ஜூன், 2019

மேற்குவங்கத்தில் இருந்து ஒலிக்க தொடங்கிய ‘திராவிடம்’ என்ற குரல்...! June 29, 2019

credit ns7.tv தமிழகத்தை தாண்டி திராவிடம் என்ற குரல் மேற்குவங்கத்தில் இருந்து ஒலிக்க தொடங்கியுள்ளது. மாநிலங்களவையில் ஒலித்த அந்த குரல் யாருடையது? கடந்த 27ம் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகந்து சேகர் ராய் , மேற்கு வங்காளம் என்ற பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு அவர் மேற்கோள் காட்டிய விவகாரம்...

தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! June 29, 2019

சென்னையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தவறிய தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை துறைமுக பகுதியில் நடைபெற்றது.  திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.பி. தயாநிதி மாறன், திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.  பிராட்வே...

ஒரு மாதத்திற்கு பிறகு அதிகரித்துள்ள வைகை அணையின் நீர்வரத்து...! June 29, 2019

கேரள மாநிலத்தில் பெய்த தொடர் மழை  காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென்மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் வைகை அணை முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது....

காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம்! June 29, 2019

credit ns7.tv மதுரையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்வலைகளை உள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்காக மணிகண்டனை, கரிமேடு காவல்துறையினர்...

மகாராஷ்டிராவில் கனமழை எதிரொலி - அடுக்குமாடி கட்டடம் இடிந்து கோர விபத்து...! June 29, 2019

மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழையால் அடுக்குமாடி கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.  மகாராஷ்டிர மாநிலம் புனே, தானே உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.  இந்நிலையில்,...

வெள்ளி, 28 ஜூன், 2019

தமிழகம் முழுவதும் 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 61 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்! June 28, 2019

தமிழகம் முழுவதும் 8 மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் உட்பட 61 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது  தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிற்கு பதிலாக அருண் பாலகோபாலன் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்....

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்...! June 28, 2019

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கத்தின் மகன் உள்ளிட்டோர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில்,...

காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பதற்கு 1% வாய்ப்பு கூட இல்லை!” - வீரப்ப மொய்லி June 28, 2019

2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாதது தேசிய அரசியலில் அதிர்வலைகளையும், காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தையும் பறைசாற்றியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னதாக நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின்...

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து ரூ.40க்கு விற்பனை செய்யும் பேராசிரியர்..! June 28, 2019

Credit Ns7.tv ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர், பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் சதீஷ் என்பவர், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து பெட்ரோல் தயாரித்துவருகிறார். Plastic pyrolysis என்ற...

காஷ்மீரில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் நேருதான்: அமித்ஷா June 28, 2019

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத செயல்களுக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த பின்னர் பேசிய அவர், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் தற்போது தேர்தல் நடத்துவதற்கான...

பொய் செய்திகளை பரப்பும் பிரபலங்கள்! June 28, 2019

பொய்செய்திகள் பரவுவதற்கு பெரும்பான்மையான காரணமாக இருப்பது சோசியல் மீடியாக்களே. குறிப்பாக வாட்சப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவைகள்தான் பொய் செய்திகள் பரவுவதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன. உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும், உண்மையான இந்தியனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற பின்குறிப்புகளோடு பரப்பப்படும் செய்திகள், வீடியோக்கள் அதன் உண்மைத் தன்மை ஆராயப்படாமல்...