வியாழன், 13 ஜூன், 2019

உத்தரபிரதேசத்தின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவி சுட்டுக்கொலை! June 12, 2019


Image
உத்தரபிரதேசத்தின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டே நாட்களில் தர்வேஷ் யாதவ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி.
உத்தரபிரதேச பார் கவுன்சிலுக்கான தேர்தல் ஜூன் 9ம் தேதியன்று தலைநகர் பிரயாக்ராஜில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தர்வேஷ் யாதவ் என்ற பெண்ணும், ஹரிஷங்கர் என்பவரும் சம அளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
இதன் காரணமாக தலைவர் பதவியில் முதல் 6 மாதங்களுக்கு தர்வேஷ் யாதவும், அடுத்த 6 மாதங்களுக்கு ஹரிஷங்கரும் பதவியில் இருப்பதாக முடிவானது. இதன் மூலம் உத்தரபிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பை தர்வேஷ் யாதவ் பெற்றார்.
இந்நிலையில் தலைவராக பொறுப்பேற்ற தர்வேஷ் யாதவுக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மனிஷ் சர்மா என்ற வழக்கறிஞர் தர்வேஷ் யாதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது, இதில் ஒரு குண்டு அவரது நெற்றிப்பொட்டில் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக மரணமடைந்தார்.
தர்வேஷ் யாதவை துப்பாக்கியால் சுட்ட, வழக்கறிஞர் மனிஷ் சர்மா தன்னை தானே சுட்டுக்கொண்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் வைத்து சக வழக்கறிஞரால் உத்தரப்பிரதேச பார் கவுன்சில் தலைவி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பியின் ஈடாஹ் நகரைச் சேர்ந்த தர்வேஷ் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு முதல் உத்தரபிரதேச பார் கவுன்சிலின் பொறுப்புத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆக்ரா சட்டக்கல்லூரியில் LLB, LLM பட்டங்களை தர்வேஷ் பெற்றுள்ளார்.

Related Posts:

  • Heart Specialist Dr.Devi Shetty, Narayana Hrudayalaya(Heart Specialist) Bangalore    A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya(Heart Speci… Read More
  • C V எப்படி இருக்கணும் ரெஸ்யூம்? '' பணிக்கான உங்கள் தகுதி சரிபார்ப்பு, ரெஸ்யூமிலேயே ஆரம்பித்து விடுகிறது...'' என்கிறார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஹெச… Read More
  • Flash Back -முடி சாயும் ஆனால் கொடி சாயாது 01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை… Read More
  • சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள் வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து … Read More
  • வட்டி வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?   உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கம… Read More