
➤சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என 306 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
➤சென்னை பெருவெள்ளத்தின் போது 15 மண்டலங்களில் உள்ள 859 இடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
➤வெள்ளத்தால் மிகவும் பாதிக்கபடக்கூடிய பகுதிகள் என 37 இடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
➤அடையாறு மண்டலத்தை சுற்றி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 24 இடங்கள் பட்டியிலடப்பட்டுள்ளன.
➤அடையாறு மண்டலத்தில் உள்ள திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரி பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
➤தேனாம்பேட்டை மண்டலத்தை சுற்றியுள்ள 5 பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤வளசரவாக்கம் மண்டலத்தை சுற்றி 26 பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடியது என பட்டியிலடப்பட்டுள்ளது.