சனி, 25 மே, 2019

தமிழக மக்கள் பாஜகவை அந்நிய கட்சியாக பார்க்கிறார்கள்: டி.கே.ரங்கராஜன் May 25, 2019

Image
மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரிவினை செய்யும் கொள்கைகளை, பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தவிர்க்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.  
தாம்பரத்தில் நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2-வது முறை ஆட்சி அமைக்க உள்ள பாஜக, எப்படி செயல்பட போகிறது என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார். எந்த மொழியும் பாதிக்காமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும், என கேட்டு கொண்ட டி.கே.ரங்ராஜன், தமிழக மக்கள் பாஜகவை அந்நிய கட்சியாக பார்ப்பதாக தெரிவித்தார்.