ஞாயிறு, 26 மே, 2019

கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ஊழியர்களே பல லட்சம் மோசடி! May 25, 2019


Image
கொடைக்கானல் நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ 17 லட்சம் மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது 2 பேருக்கு வலைவீச்சு 
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இதில் ரிச்சர்ட் என்பவர் காசாளராகவும்  சரவணகுமார் மற்றும் சுசீந்திரன் அலுவலக 
ஊழியராக பணிபுரிந்து வந்தனர். மேலும் சிவக்குமார் விஜயகாந்த் ஆகியோரும் 
பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு 
18  வாடிக்கையாளர்களின் பெயரில்  அவர்களது கணக்கில் இருந்து ரூ 17 லட்சம் 
மோசடி  செய்தனர். இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ரிச்சர்ட் மற்றும் 
சரவணகுமார் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 
சுசீந்திரன் தற்பொழுது கொடைக்கானலில் செயல்பட்டு வரும் பணியாளர், கூட்டுறவு 
நாணய சங்க செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் மீது பழனி கூட்டுறவு 
சங்கங்களின் துணைப் பதிவாளர் இளமதி திண்டுக்கல் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் ரூ 15 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மோசடி தொடர்பாக வங்கி காசாளர் ரிச்சர்ட் அலுவலக ஊழியர்கள் சரவணகுமார் சுசீந்திரன் ஆகியோரை போலீசார் இன்று  25.05.19 கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக சிவக்குமார் மற்றும் விஜயகாந்த்தை போலீசார் தேடி 
வருகின்றனர்.