ஞாயிறு, 19 மே, 2019

இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்...! May 19, 2019


Image
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முகமது, இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்கள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதனை உடனடியாக கட்டுப்படுத்தி, இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமது வலியுறுத்தினார்.