வெள்ளி, 24 மே, 2019

உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளை நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! May 22, 2019

Image
உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு, புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 31 ஆக உயர்ந்துள்ளது. 
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கியவர் அனிருத்தா போஸ், இவர் தற்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.  நீதிபதி கவாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதிபதி சூரியகாந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.