திங்கள், 20 மே, 2019

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை திமுக பொருட்படுத்தாது: ஸ்டாலின் May 20, 2019

Image
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை திமுக பொருட்படுத்தாது என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை திமுக பொருட்படுத்துவது இல்லை என கூறினார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு என்ன என்பது இன்னும் 3 நாட்களில் தெரிய வந்துவிடும் என்றும், அதுவரை காத்திருப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை மறுத்த அவர், புதிதாக அமைய உள்ள அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரிய வரும் என்றும் கூறினார்.