புதன், 22 மே, 2019

சர்வதேச கராத்தே போட்டியில் 13 பதக்கங்களை வென்று குவித்த சென்னை மாணவர்கள்..! May 22, 2019


Image
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 
கடந்த 19ம் தேதி மலேசிய நாட்டில் உள்ள சிலாங்கூர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் சீனா, சிங்கப்பூர், பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த 7 மாணவ, மாணவியர் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றனர். 
இந்நிலையில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவியர் சென்னை விமான நிலையம் திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கராத்தே போன்ற தற்காப்பு கலையை மாணவர்கள் கற்றுக்கொள்வது அவசியம் எனவும், இதற்கு அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.