சனி, 25 மே, 2019

மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குதல்! May 25, 2019

Image
மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மத்தியப்பிரதேசம் மாநிலம் சியோனியில் ஒரு பெண் உட்பட 3 பேர் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக வதந்தி கிளம்பியது. இதனை அடுத்து ஸ்ரீராம்சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண்களை மரத்தில் கட்டி வைத்து கம்பு மற்றும் தடிகளால் தாக்கிய அந்த கும்பல், இஸ்லாமிய ஆண்களை கொண்டே அந்த பெண்ணை தாக்க செய்துள்ளனர். 
இறுதியாக மூவரையும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடும் படி வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.