புதன், 22 மே, 2019

சேலம் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்! May 22, 2019

Image
சேலம் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள பெருமா கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் ,ரெட்டிப்பட்டி ,பள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு நான்கு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் மூலம் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. 
கடும் வறட்சியால் ஏற்கனவே அப்பகுதியில் ஆள்துளை கிணறு வறண்டு விட்டதால் காவிரி நீரையே நம்பி இருந்த பொதுமக்களுக்கு கடந்த 2 மாத காலமாக போதிய குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. 
மேலும், இது குறித்து பெருமாகவுண்டம்பட்டி பட்டி ஊராட்சி நிர்வாகத்திடமும் வீரபாண்டி ஒன்றிய நிர்வாகத்திடமும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் போதுமான குடிநீர் வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பெருமாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.