திங்கள், 20 மே, 2019

தமிழக அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை புதிய சீருடை அறிமுகம்! May 20, 2019

Image
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 
அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வண்ணத்திலான இலவச சீருடை வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கரும்பச்சை நிறத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறத்தில் கட்டமிட்ட மேல் சட்டையும் வழங்கப்படும் எனவும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் புதிய சீருடை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
மேலும் ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிற வண்ணத்தில் கால் சட்டையும், அதே நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்படுகிறது. இதில் மாணவிகளுக்கு சந்தன நிறக் கோட்டுடன் கூடிய சீருடை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது