வெள்ளி, 24 மே, 2019

சட்டப்பேரவையில் தேவையான இடங்களுக்கு அதிகமாகவே பெற்று ஆட்சியை தக்கவைத்த அதிமுக! May 24, 2019

Image
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 
அதன்படி திருப்போரூர், பூந்தமல்லி, பெரம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் திருப்பரங்குன்றம், ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது. 
இதன்படி அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மானாமதுரை, பெரியகுளம், நிலக்கோட்டை, சாத்தூர், பரமக்குடி, சோளிங்கர், சூலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக பெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆளும் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதன்படி பேரவையில் அதிமுகவின் பலம் 122ஆக அதிகரித்து பெருன்பான்மைக்கு தேவையான இடங்களுக்கு அதிகமாகவே பெற்றுள்ளது.