வியாழன், 30 மே, 2019

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து! May 30, 2019

Image
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 10 மணி அளவில் படிப்படியாக அதிகரித்தது. தற்போது தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவியில் குளித்தும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்