திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிமேடு ஊராட்சிக்குட்பட்ட, எல்லை நாலடி பகுதியில், முள்ளியாற்றின் அருகே மூட்டை மூட்டையாக ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வருவாய்த்துறையினருடன் அங்கு சென்ற காவல்துறையினர், ஆதார் அட்டைகளை ஆய்வு செய்தனர். அஞ்சலக ஊழியர்கள் கொண்டுவந்து கொட்டினார்களா? அல்லது போலி ஆதார் கார்டுகளா என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.