சனி, 25 மே, 2019

குற்றாலத்தில் சீசன் கால அரிய வகை பழவகைகள் விற்பனை தொடங்கியது! May 25, 2019

Image
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது.  
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட்  சீசன் காலங்களில் அரிய வகை பழவகைகளான ரம்புட்டான், துரியன், பன்னீர் கொய்யா மற்றும் மங்குஸ்தான் முட்டை பழம் போன்றவைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில்  இவ்வகை பழங்களின் விற்பனை, முன்கூட்டியே தொடங்கியுள்ளது.  
இவை தவிர ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் டிராகன் பழம், ஜிவி கிச்சர்ஸ் போன்ற பழங்களும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஐந்தருவியில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் வரத்து இருந்த போதிலும், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


Related Posts: