வியாழன், 30 மே, 2019

கம்பம் பகுதியில், வீசிய பலத்த சூறைக்காற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதம்! May 30, 2019

Image
கம்பம் பகுதியில், நேற்று மாலை வீசிய பலத்த சூறை காற்றில் சிக்கி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. 
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில், பல ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வாழை மரங்களில் குலை தள்ளியிருந்த நிலையில், நேற்று சூறைக்காற்று வீசியது. இதில், ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. 
இதனால், சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.