செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நடந்து முடிந்தது. 72.62 சதவீதம் வாக்குப்பதிவானதாக கலெக்டர் தெரிவித்தார்.

credit dinakaran.com 2019-08-06@ 00:58:33








வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. 72.62 சதவீதம் வாக்குப்பதிவானதாக கலெக்டர் தெரிவித்தார். வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில்  கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர்  ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர்  போட்டியில் உள்ளனர். மொத்த   வாக்காளர்கள் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர். வேலூர் மக்களவை தொகுதிக்கு  உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1553 வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. அதிகாரிகள்  உட்பட 7 ஆயிரம்  பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சாவடி  பாதுகாப்பு பணியில் 3,957 போலீசார் மற்றும் 1,600 துணை ராணுவப் படையினர்  ஈடுபடுத்தப்பட்டனர். 400 ஊர்க்காவல் படையினரும் பங்கேற்றனர். பதற்றமான வாக்குச்சாவடி  மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. பெண்கள்  மட்டுமே வாக்களிக்கும் பிரத்யேக வாக்குச்சாவடி  மையங்களிலும் பெண்கள்  ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோயாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Related Posts:

  • எல்லா நேரமும் இரட்சகர்! انت حقا محيى الدين *انت قطب باليقين كنت غوثا كل حين *فادفعن عنا حينا நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவ… Read More
  • Bahu lao beti bachao   வந்துள்ள செய்தி ஏற்கனவே முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் செய்கின்றார்கள்என்றொரு கேவலமான பொய்யை பரப்பிஅது மிகப்பெரிய அடியாக RSS இயக்கதிற்… Read More
  • மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆ… Read More
  • புதுக்கோட்டை டவுன் ஹாலில்-தொழில் முனைவோர் கூட்டம் வரும் 25 01 2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டை டவுன் ஹாலில் காலை 9 30 முதல் மாலை 5 00 வரை நம் குழுவின் தொழில் முனைவோர் கூட்டம். அரசு சார்ந்த அதிகாரிகளு… Read More
  • ஜின்னிடமிருந்து மீட்டவர்!. ادى لعبد الله ذي النبالة *بنتا له اذ بلغوا الرسالة قدموس جن الكرخذو الضخامة *من قطبهم هادي اولى الضلالة அப்துல்லாஹ் என்பாரின் … Read More