செவ்வாய், 2 ஜூன், 2020

ஜூன் 19ம் தேதி மாநிலங்களவைக்கான எம்.பி தேர்தல்

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திராவில் 4, குஜராத்தில் 4, கர்நாடகாவில் 4, ஜார்கண்டில் 2, மத்திய பிரதேசத்தில் 3 மற்றும் ராஜஸ்தானில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு மாநிலங்களவை எம்.பியை தேர்வு செய்யவும் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், ஓட்டுகள் அன்று மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.