திங்கள், 17 செப்டம்பர், 2018

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு! September 17, 2018

Image

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் செல்லாது என சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2014ம் ஆண்டு தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீன விடுதலை தொடர்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசியதற்காக திருமுருகன் காந்தி மீது 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின்மேரி, திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் செல்லாது என தீர்பளித்தார்.