புதன், 19 செப்டம்பர், 2018

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ப்ரூனஸ் மலர்கள்! September 19, 2018

Image

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதையடுத்து கொடைக்கானலில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது.  

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தொடங்கும் 2ம் கட்ட சீசன், டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இரண்டாம் கட்ட சீசனை வரவேற்கும் வகையில், நட்சத்திர ஏரியை சுற்றி ப்ரூனஸ் மலர்கள் பூத்து, ரம்மியமாக காட்சியளிக்கின்றன. 

இந்த ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் அமைந்ததோடு மட்டுமல்லாமல் வெகுவாக கவர்ந்தும் வருகிறது. ஏற்கனவே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் தற்போது கொடைக்கானலில் பூத்துக் குலுங்கி வருகிறது. எனவே இந்த சீசனில் சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த மகிழ்ச்சியான சூழலில் தற்போது கொடைக்கானல் உள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பலரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.