திங்கள், 17 செப்டம்பர், 2018

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு! September 17, 2018




புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகு செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மாணவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒரு மதத்தை உயர்த்தியும், மற்ற மதங்களை குறைவாக சித்தரித்தும் பல்கலைக்கழக வளாகத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக, மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட மாணவர் அமைப்புக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறிய மாணவர்கள், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். பல்கலைக்கழக வளாகத்தில் இரவில் மாணவர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 
Image