திங்கள், 24 செப்டம்பர், 2018

நந்தினியின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பாஜகவினர்! September 23, 2018

Image


மானாமதுரையில் சமூக ஆர்வலர் நந்தினியின் தந்தை மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். 

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்ற அவர்களை மானாமதுரை அருகே பாஜகவினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நந்தினியின் தந்தை ஆனந்தனை பாஜகவை சேர்ந்த 5 பேர் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நந்தினி, ஆனந்தனை போலீஸார் கைது செய்தனர்.