வியாழன், 27 செப்டம்பர், 2018

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கொள்ளைபோன 89 சிலைகள் சைதாப்பேட்டையில் மீட்பு! September 27, 2018

Image

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கொள்ளை போன 89 சிலைகள் சென்னை சைதாப்பேட்டையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் கடத்தல் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது 300க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் கைப்பற்றப்பட்டன. 

வீட்டை இடித்து முழுமையாக சோதனை நடத்த அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் உள்ளதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படட்டன. அதனையேற்று நீதிமன்றம் சோதனை நடத்த அனுமதி வழங்கியது. 

இதனையடுத்து, இன்று அவரது வீட்டில், சிலைக்கடத்தல் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 4 ஐம்பொன் சிலைகள், கல் தூண்கள் உட்பட 89 சிலைகள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவாக உள்ள ரன்வீர் ஷாவை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.