செவ்வாய், 25 செப்டம்பர், 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! September 25, 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து 2-ஆவது முறையாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

2017-18 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலவரையறை ஆகஸ்ட்-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வரும் 30-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Image